கால்வாய் அமைக்கும் பணிகள் முடிக்கப்படுமா?

Update: 2022-09-05 15:23 GMT
பெங்களூரு கோகுலா விரிவு சாலையை அந்த பகுதியினர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக அந்த சாலையில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. பல நாட்கள் ஆகியும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடித்து, பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி