ஆக்கிரமிக்கப்பட்ட நிழற்கூடம்

Update: 2022-09-02 16:38 GMT

சேலம் அம்மாபேட்டை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நலன் கருதி நிழற்கூடம் அமைக்கப்பட்டது. ந்த நிழற்கூடத்தின் முன்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட சைக்கிள்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பயணிகள் நிழற்கூடத்தில் உட்கார கூட முடியாமலும், மழை மற்றும் வெயில் காலங்களில் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பயணிகளின் நலன் கருதி ஆக்கிரமிப்புகளை அகற்றி நிழற்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-ராஜன், அம்மாபேட்டை, சேலம்.

மேலும் செய்திகள்