கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள சிறுவர்களுக்கான போக்குவரத்து பூங்கா அருகே நடைபாதையில் 3 இடங்களில் மரக்கிளைகள் வெட்டப்பட்டு அப்படியே போடப்பட்டு உள்ளன. நடைபாதையை மரக்கிளைகள் ஆக்கிரமித்து உள்ளதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் சாலையில் இறங்கி போகின்ற நிலை உள்ளது. இதனால் அங்கு விபத்து அபாயம் உள்ளது. எனவே மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.