அரியலூரில் இருந்து தஞ்சாவூர் வரை அதாவது வி.கைகாட்டி மற்றும் முனியங்குறிச்சி, பெரியதிருக்கோணம், சுண்டகுடி ஏலாக்குறிச்சி, திருமானூர் வழியாக அரசு பஸ் ஒன்று காலை நேரத்தில் இயங்கி வந்தது. இந்த பஸ்சில் பெரும்பாலுமான கிராம மக்கள் தினமும் அரியலூருக்கு கூலி வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என அனைவரும் சென்று வந்தனர். இந்த நிலையில் இந்த பஸ் எவ்வித காரணமுமின்றி கடந்த 2020-ம் ஆண்டிற்கு முன்பே மேற்படி தடத்தில் இயங்காமல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து தினமும் இரவு 7:20 மணிக்கு அரசு பஸ் ஒன்று தூத்தூர் வரை இயங்கி வந்தது. இந்த பஸ்சில் கூலி வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பும் பொதுமக்களுக்கு மிகவும் பேருதவியாக இருந்தது. இந்த அரசு பஸ்சும் எவ்வித காரணமுமின்றி நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.