மாணவர்களின் ஆபத்தான பயணம்

Update: 2022-08-27 13:34 GMT
பரங்கிப்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1500 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். தினமும் மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் பரங்கிப்பேட்டையில் இருந்து புதுச்சத்திரம் மார்க்கமாக செல்லும் பஸ்சில் ஏறுவதற்காக 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காத்திருக்கிறார்கள். அரசு பஸ் வந்ததும், அதில் மாணவர்கள் முந்தியடித்துக்கொண்டு ஏறுகிறார்கள். பஸ்சில் இடம் இல்லாத மாணவர்கள், படிக்கட்டில் தொங்கியபடியும், ஜன்னல் கம்பியில் தொங்கியபடியும் ஆபத்தான பயணம் மேற்கொள்கிறார்கள். எனவே மாலையில் பரங்கிப்பேட்டையில் இருந்து புதுச்சத்திரத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்