சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் புங்கவாடியில் இருந்து மஞ்சினி வழியாக ஆத்தூர் செல்லும் பஸ்சில் புங்கவாடியில் இருந்து மஞ்சினி அரசு பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அதே நேரத்தில் புங்கவாடியில் இருந்து மஞ்சினி வழியாக ஆத்தூருக்கு வேலைக்கும் செல்கிறார்கள். இந்த பஸ்சில் பள்ளி மாணவ-மாணவிகள் செல்வதால் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் படிக்கட்டில் பயணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இதற்கு மாற்று வழி ஏற்பாடு செய்து அல்லது கூடுதல் பஸ்கள் இயக்கி மக்களுக்கு எந்த விதத்திலும் உயிர் சேதம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.