பட்ட மரம் அகற்றப்படுமா?

Update: 2022-08-26 09:07 GMT

நாகர்கோவில் வடசேரி காணியாளன்புதுதெருவில் சாலையோரம் ஒரு பட்ட மரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக பொதுமக்களின் நடமாட்டமும், வாகனங்களின் போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். இந்தநிலையில் பட்ட மரத்தின் கிளைகள் அவ்வப்போது முறிந்து விழுந்த வண்ணம் உள்ளது. இதனால், அந்த தெருவில் செல்லும் மக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கிறார்கள். மரம் முறிந்து விழுந்து பேராபத்து ஏற்படும் முன்பு மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், வடசேரி.

மேலும் செய்திகள்