பஸ் நிலையம் வராத பஸ்கள்

Update: 2022-08-25 15:19 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பஸ் நிலையத்திற்கு உள்ளே வந்து பயணிகளை இறக்கி விடாமல் 90 சதவீத பஸ்கள் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி செல்லும் சாலைகளிலேயே நிறுத்தப்பட்டு, பயணிகள் இறக்கி விடப்படுகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்கு உள்ளே வந்து செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யனார், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்