தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால் சிகிச்சைக்கு வருபவர்கள் சிரமமின்றி வந்து செல்ல மேற்கண்ட பகுதிக்கு முறையான பஸ் வசதி இல்லை. குறிப்பாக ஆஸ்பத்திரியில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு செல்ல போதுமான பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதன்காரணமாக பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், சிகிச்சைக்கு வருபவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்கு முறையான பஸ் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?