கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேடப்பள்ளி கிராமத்தில் அரசு மாதிரி ஆங்கிலப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு காலை வேளையில் செல்ல பஸ் வசதி இல்லை. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை. இந்தநிலையில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல சரக்கு வேன் மற்றும் மினிவேன்களில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் அவலநிலை இருந்து வருகிறது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி நேரத்தில் குளகிரி, சின்னார், பலவ திம்மனபள்ளி வழியாக அரசு பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலியபெருமாள், பேடப்பள்ளி, கிருஷ்ணகிரி.