நிறுத்தப்பட்ட பஸ்சால் பொதுமக்கள் அவதி

Update: 2022-07-08 16:47 GMT

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம்-தென்னூர் முதல் ஜெயங்கொண்டம், ஆனந்தவாடி மற்றும் அரியலூர் வழியாக காலை 8:20 மணிக்கு திருச்சி சென்று கொண்டிருந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி