உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை

Update: 2022-09-19 09:55 GMT

வாலாஜாவில் இருந்து சோளிங்கர், அம்மூர் செல்லும் கூட்ரோட்டில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது.‌ இந்த சந்திப்பு சாலையில் ஊரின் எல்லைப் பகுதியில் இருப்பதால் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் குறைவாக காணப்படும். கடந்த சில நாட்களாக இங்குள்ள உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை. இதனால் இப்பகுதி வழியாக நடந்து செல்பவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி உயர் கோபுர மின்விளக்குகளை எரியவிட வேண்டும்.

-அழகியசிங்கர், வாலாஜா. 

மேலும் செய்திகள்