நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

Update: 2022-08-25 09:57 GMT

கலசபாக்கம் ஒன்றியம் லாடவரம் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கநல்லூர், கணேசபுரம், ஆனந்தபுரம், விநாயகபுரம் ஆகிய கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது. இதற்கு திருவண்ணாமலையில் இருந்து லாடவரம், கெங்கநல்லூர் வழியாக பாடகம் கிராமம் வரை 5-ம் நம்பர் அரசு டவுன் இயக்கப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும், வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிலையில் பாடகம் செல்லும் சாலை சரியில்லாத காரணத்தால் அந்த டவுன் பஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தற்போது அந்தச் சாலை சீரமைக்கப்பட்டு தார் சாலையாக உள்ளது. எனவே அந்த வழியில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 5-ம் நம்பர் அரசு டவுன் பஸ்சை மீண்டும் லாடவரம் வரை இயக்க வேண்டும்.

கந்தன், லாடவரம் 

மேலும் செய்திகள்