கால்வாய் கட்டும் பணியை தொடங்குவார்களா?

Update: 2022-10-19 12:22 GMT

வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் 3-வது வார்டு தனலட்சுமிநகரில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு 4 மாதங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் கழிவுநீர் கால்வாய் கட்டவில்லை. அந்தப் பள்ளத்தில் குழந்தைகள் தவறி விழுந்து விடுகிறார்கள். அந்தப் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை தொடங்குவார்களா?

-மு.மணி, வி.சி.மோட்டூர்.

மேலும் செய்திகள்