கால்வாய் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2023-03-15 13:02 GMT


திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் நெடுஞ்சாலையின் இருபுறமும் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பள்ளத்தில் தேங்கி கொசு உற்பத்தி ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்