வாலாஜாவில் சோளிங்கர் ரோட்டில் 2½ ஏக்கர் பரப்பளவில் போலீஸ் குடியிருப்பு வளாகம் உள்ளது. அங்கு, கழிவுநீர் கால்வாய் கட்டப்படாமல் உள்ளது. திறந்தவெளியில் ஓடும் கழிவுநீரால் அப்பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. எனவே வாலாஜா நகராட்சி நிர்வாகம் போலீஸ் குடியிருப்பு வளாக பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமகிருஷ்ணன், வாலாஜா.