திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பஸ் நிறுத்தம் அருகே திறந்தவெளி கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் அதில் குப்பைகளும், பிளாஸ்டிக் பைகளும் வீசப்படுவதால், அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு உண்டாகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.