தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனி அரசமரம் அருகே கடந்த ஒரு ஆண்டாக திறந்த வெளியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகிறது. மேலும் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் ஆய்வு செய்து கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.