சுகாதார சீர்கேடு

Update: 2026-07-26 15:39 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேசுவரம் தேவராஜ் நகர் 1- வது தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி போதிய அளவில் இல்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி அடிக்கடி சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. மேலும் மழை பெய்யும் காலங்களில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து அதிகளவில் சாலையில் தேங்குகிறது. எனவே மேற்கண்ட பகுதியில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்திதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்