ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் கில்லா வரதராஜ பெருமாள் கோவில் அருகே கால்வாய் முறையாக அமைக்காததால் கழிவுநீர் முழுவதும் வீட்டின் முன்பு தேங்கி நிற்கிறது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் முகம் சுழிக்க நேரிடுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?
-சக்திவேல், ஆரணி.