கீழ்பென்னாத்தூரில் பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணி பேரூராட்சி முழுவதும் நிறைவடையாமல் உள்ளது. ஒரு சில இடத்தில் பணியை முடித்து விட்டு, ஒரு சில இடங்களில் பணியை முடிக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர். 2 ஆண்டுகளாக இப்படியே கிடப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நா.தங்கவேல், கீழ்பென்னாத்தூர்.