ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் கட்ட வேண்டும்

Update: 2022-09-17 09:14 GMT

வாணியம்பாடி-சேலம் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதற்காக நகர்ப்புறங்களில் இருபுறங்களில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட திருப்பத்தூர் பஸ் நிலைய பகுதியில் தற்போது கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் ஆக்கிரமிப்புகள் ஏதும் அகற்றாமல் அப்படியே கட்டப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பஸ் நிலையப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும்.

-சண்முகம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்