கூடலூரில் பஸ் நிலையம் உள்ளது. இதன் முன்பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீர் பஸ் நிலைய முன்பகுதியில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட துைற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.