தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-06-14 17:39 GMT
கச்சிராயப்பாளையத்தில் கோமுகி ஆற்றின் மேற்கு கரையோரத்தில் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த கிணற்றில் உள்ள தண்ணீரையே அக்கராயப்பாளையம், மேட்டுப்பாளயைம் உள்ளிட்ட அருகில் உள்ள கிராமமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். கிணற்றை சுற்றிலும் கழிவுநீரானது தேங்கி நிற்கிறது. கழிவுநீர் கிணற்றில் கலப்பதால், அதனை குடிக்கும் மக்களுக்கு வாந்தி பேதி, காலரா போன்ற தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து கிணற்றின் அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்