கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2024-01-28 11:08 GMT

திருவண்ணாமலை நகராட்சி 36-வது வார்டு கம்மணகொல்லை தெரு முதல் சந்து பகுதியில் தெருக்களில் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் மாடுகளின் சாணத்தை கொட்டியதால் தூர்ந்துபோய் உள்ளது. கால்வாயை தூர்வார கோரி பலமுறை நகராட்சி அலுவலகத்தில் கூறியும் எந்தப் பலனும் இல்லை. நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை. கால்வாய் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, திருவண்ணாமலை

மேலும் செய்திகள்