கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-03-08 11:36 GMT



வாலாஜாபேட்டை நகராட்சி 4-வது வார்டில் அடங்கிய பஞ்சுப்பேட்டை பகுதி சீனிவாச பெருமாள் கோவில் தெரு மற்றும் சுகவாசமுத்தப்ப முதலி தெருவில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்படாததால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி அந்த பகுதி மக்கள் பகலிலும், இரவிலும் தூங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே நகராட்சி அதிகாரிகள் கால்வாய்களை தூர்வாரி, கொசு மருந்து அடிக்க வேண்டும்.

-புருஷோத்தமன், வாலாஜாபேட்டை.

மேலும் செய்திகள்