கழிவுநீர் கால்வாய் வசதி தேவை

Update: 2024-05-26 19:28 GMT

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது பெருமணம். அந்தக் கிராம தெருக்களில் கழிவுநீர் கால்வாய் இல்லை. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. பெருமணம் கிராமத்தில் அனைத்துத் தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய் வசதியை ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன் வர வேண்டும்.

-கோகுல், பெருமணம்.

மேலும் செய்திகள்