கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2023-06-11 16:59 GMT

வேலூர் விருதம்பட்டு பகுதியில் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது அடிக்கடி மழை பெய்வதால் கட்டுமானப் பணிக்கு இடையூறு ஏற்பட்டு பள்ளத்தில் தண்ணீர் தேங்குகிறது. சென்ரிங் அடிக்க சிரமமாக இருக்கும். மழை பெய்யாத நேரத்தில் பள்ளத்தில் தேங்கி கிடக்கும் தண்ணீரை வெளியேற்றி விட்டு கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-சிவா, விருதம்பட்டு.  

மேலும் செய்திகள்