தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் டெப்போ முல்லை நகரில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனை உடனே சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.