தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2026-05-10 16:08 GMT

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி பேரூராட்சி 3-வது வார்டு அம்பேத்கர் நகரில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்