ஈரோடு சக்தி விநாயகர் கோவிலையொட்டி செல்லும் சாக்கடை கால்வாயில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது.. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழித்தவாறு செல்ல வேண்டிய நிலை உள்ளது. நோய் பரவ வாய்ப்புள்ளது. இதனால் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழீவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?