வீடுகள் முன்பு தேங்கும் கழிவுநீர்

Update: 2023-03-01 16:44 GMT

வேலூர் மக்கான் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள தெரு ஒன்றில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் அடைப்பு காரணமாக அங்குள்ள வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கி தெருவில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு தொல்லையும் ஏற்படுகிறது. வீட்டின் உள்ளே இருப்பவர்கள் வெளியே வருவதற்கு சிரமப்படுகின்றனர். தெருவில் நடந்து செல்லும்பொது மக்களும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாய் அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தாமரைகண்ணன், வேலூர்.

மேலும் செய்திகள்