சாலையோர பள்ளத்தில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-09-23 13:08 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம்-ஆலங்காயம் மற்றும் வெங்களாபுரம்-ஏழருவி செல்லும் சாலையையொட்டி 2 அடி ஆழ பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் வெங்களாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதிய காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் அந்தக் கழிவுநீர் ஆலங்காயம் சாலையில் ஓடி 2 அடி ஆழ பள்ளத்தில் தேங்குகிறது. அந்த வழியாக எதிர் எதிரே வரும் 2 வாகனங்கள் மாறி செல்லும்போது 2 அடி ஆழ பள்ளத்தில் சக்கரங்கள் சிக்கி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் உள்ள 2 அடி ஆழ பள்ளத்தை சரி செய்ய வேண்டும். சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதைத் தடுக்க வேண்டும்.

-த.பா.யுவராஜ், வெங்களாபுரம்.

மேலும் செய்திகள்