திறந்த நிலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-02-08 17:28 GMT

திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் நகராட்சி கட்டண கழிப்பிடம் உள்ளது. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் திறந்த நிலையில் உள்ள கால்வாயில் செல்கிறது. சில நேரங்களில் அந்தக் கால்வாய் நிரம்பி சாலையில் செல்கிறது. கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் துர்நாற்றத்துடன் செல்கிறது. இதனால் பொதுமக்களும், பஸ் பயணிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் பொதுமக்களும் பெரும் அவதிப்படுகின்றனர் எனவே திறந்த நிலையில் ஓடும் கழிவுநீரை தடுக்க நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாரதி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்