இளம்பிள்ளை பெருமாகவுண்டம்பட்டி, சஞ்சீவிராய பெருமாள் கோவில் எதிரே சாலையில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் நகரில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சவுடேஸ்வரி அம்மன் நகரில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாமே!