சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2026-06-07 16:47 GMT

திருப்பூர் அருகே உள்ள டி.கே.டி. மில்லில் இருந்து கணபதிபாளையம் வழியாக பொங்கலூர் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட முல்லை நகரில் இருந்து சாக்கடை கால்வாய் வழியாக வரும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்ளது. மேலும் சாலையில் கழிவுநீர் செல்வதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது கழிவுநீர் படுவதால் வாகன ஓட்டிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணன், அருள்புரம்.

மேலும் செய்திகள்