கணபதி அரசு பள்ளி அருகே சாக்கடை கால்வாய் உள்ளது. இதில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்ேதாடுகிறது. மேலும் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.