கோவை காந்திபுரம் 1-வது வீதி இளங்கோ நகரில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.