சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மகுடஞ்சாவடி ஊராட்சி கீழ் உலகப்பணூர் பகுதியில் உள்ள அரசு ரேஷன் கடை அருகே செல்லும் சாக்கடையில் பாட்டில்களும், பிளாஸ்டிக் கவர்களும், குப்பைகளுடன் செடிகள் முளைத்து சாக்கடைகழிவுகள் பல மாதங்களாக அள்ளாமல் தேங்கியுள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு கூறியும் நடவடிக்கை எடுக்க வில்லை. அப்பகுதியில் கொசு உற்பத்தியாகி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே உடனடியாக இந்த சாக்கடை கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்து தரவேண்டும்.