புகார் எதிரொலி

Update: 2026-02-22 12:03 GMT

சென்னை அடையாறு, இந்திரா நகர் கெனால் வங்கி சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் கடந்த சில வாரங்களாக சேதமடைந்த நிலையில் இருந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்