சிறுபாக்கம் அடுத்த மங்களூர் ஊராட்சி வடக்கு வீதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்துள்ளது. இதனால் கழிவுநீரானது சாலையில் வழிந்தோடும் நிலை உருவாகியுள்ளது. மேலும் அதிலிருந்து உருவாகும் கொசுக்களால் அப்பகுதி மக்களுக்கு டெங்கு, காலரா போன்ற தொற்றுநோய்களும் பரவும் நிலை உருவாகியுள்ளது. எனவே உடைந்த கழிவுநீர் கால்வாயை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?