வடலூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிகளவில் கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.