அடிப்படை வசதிகள் தேவை

Update: 2026-02-15 13:48 GMT

கிருஷ்ணகிரி ஒன்றியம் பெத்ததாளப்பள்ளி ஊராட்சி ஆனந்தா நகர், சித்தன் லேஅவுட் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் அடிப்படை மற்றும் முறையான கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. சாலை வசதி இல்லை. கழிவுநீர் கால்வாய், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தெருநாய்களின் தொல்லை அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆனந்தா நகரில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் செய்திகள்