அவினாசி காமராஜர் நகரில் சிவசக்தி அவென்யூ பகுதியில் சாக்கடை கால்வாய்கள் சரியான முறையில் அமைக்கப்படாததால், கழிவுநீர்கள் நிரம்பி சாலையில் வழிந்தோடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, இந்த பகுதியில் உடனடியாக கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.