மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் எம்.தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது ஓபிளி நாயக்கன்பட்டி. இந்த பகுதியில் மொரப்பூரிலிருந்து கல்லாவி செல்லும் சாலை உழவர் நகர் பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியில் செல்ல கால்வாய் அமைக்கவில்லை. இதனால் வீட்டின் வெளிப்புறத்தில் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மொரப்பூர்-கல்லாவி ரோட்டில் உள்ள உழவர் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?