சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வில்லிவாக்கம், ராஜாமங்களம் மெயின்ரோட்டில் உள்ள பழமையான கட்டிடம் ஒன்றில் முறையான கழிவுநீர் மேலாண்மை வசதிகள் இல்லை. இதனால் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கிணற்று நீரில் கலந்து நிலத்தடிநீர் மாசு அடைகிறது. மேலும் அப்பகுதியின் சுகாதாரம் கேள்விக்குள்ளாகி தொற்றுநோய் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அந்த பழமையான கட்டிடத்தை சீரமைக்கவும், முறையான கழிவுநீர் மேலாண்மை செய்திடவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.