பண்ருட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறை கட்டிடம் சேதமடைந்து பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகள், பொதுமக்கள் அந்த கழிப்பறை கட்டிடத்தை பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பராமரிப்பின்றி காட்சிப்பொருளான கழிப்பறை கட்டிடத்தை விரைந்து சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.