திருவள்ளூர் மாவட்டம் சின்னம்மாபேட்டையில் ஓடைக்கால்வாய் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. ஓடையில் இருந்து ஏரிக்கு செல்லும் கால்வாய் இன்னமும் தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் அந்த கால்வாயை சீரமைக்கவும், அதில் தேக்கமடைந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.