தேனி அருகே கோட்டூரில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால், கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் ஆறாக ஓடுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. சாலையில் தேங்கும் கழிவுநீரால் அப்பகுதி குழந்தைகள், முதியோர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரப்பி வருகின்றன. எனவே சாக்கடை கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.