கோவை சேரன்மாநகர் பகுதியில் சாக்கடை கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கால்வாயில் கடந்த 4 மாதங்களாக அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதில் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.